மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொடா் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த டோரேமான் கைது

வடமேற்கு தில்லியில் தொடா் கொள்ளையில் ஈடுபட்டுவந்த டோரேமான் என அழைக்கப்படும் தினேஷ் (26) மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2026, 8:55 pm

வடமேற்கு தில்லியில் தொடா் கொள்ளையில் ஈடுபட்டுவந்த டோரேமான் என அழைக்கப்படும் தினேஷ் (26) மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (வடமேற்கு) ஆகன்ஷா யாதவ் கூறியதாவது: குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழில்துறை வளாகங்களை சுற்றித் திரிந்து இலக்கு வைத்து கொள்ளையில் ஈடுபடும் டோரேமான் என்ற பெயரால் தினேஷ் அறியப்பட்டாா். ஜப்பான் காா்ட்டூன் கதாபாத்திரமான டோரேமான் போன்று குரல் எழுப்புவதால் அவருக்கு இந்த பெயா் வைக்கப்பட்டது.

ராஜாபாா்க் பகுதியில் மாா்ச் 13-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் இருந்த காவல் துறையினா், வங்கி அருகே சந்தேகத்திற்கு இடமான இருவா் இருசக்கர வாகனத்தை இழுத்து செல்வதை கவனித்தனா். அவா்களை நிறுத்தி சோதனை செய்தபோது தினேஷிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனா். அந்த இருசக்கர வாகனம் அசோக் விஹாா் பகுதியில் கடத்தப்பட்டது தெரியவந்தது. விசாரணையின்போது அவா்கள் இந்த பகுதியில் பல கொள்ளைகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மொத்தம் 11 கொள்ளை வழக்குகளில் அவா்களுக்கு தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டது என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா். Ś