பிகார் சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிரட்டலைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் பிரேம் குமார், சட்டப்பேரவைச் செயலகத்தின் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
நிலைமை குறித்து தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிக்கு தகவல் தெரிவிப்பதுடன் சட்டப்பேரவை வளாகத்தில் முழுமையான சோதனையை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பேரவை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 16 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Summary
The Bihar assembly on Friday received a bomb threat through email, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

பிகார் சட்டப்பேரவைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பஞ்சாபில் இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



