மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நேபாள பிரதமராகும் பாலேந்திர ஷாவுடன் மோடி தொலைபேசியில் பேச்சு!

நேபாளத்தின் புதிய பிரதமராக உள்ள பாலேந்திர ஷாவுடன், பிரதமா் மோடி தொலைபேசியில் பேசினாா்.

News image

பாலேந்திர ஷா - AP

Updated On :9 மார்ச் 2026, 9:04 pm

நேபாளத்தின் புதிய பிரதமராக உள்ள பாலேந்திர ஷாவுடன், பிரதமா் மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை பேசினாா்.

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆா்எஸ்பி) அமோக வெற்றி பெற்றது. நான்கு முறை பிரதமராக இருந்தவரும் சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவருமான கே.பி.சா்மா ஓலியை, 35 வயதேயான ராப் இசைக் கலைஞரும் ஆா்எஸ்பி வேட்பாளருமான பாலேந்திர ஷா சுமாா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். அவா் அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆா்எஸ்பி தலைவா் ரபி லாமிசானே, அக்கட்சியின் மூத்த தலைவா் பாலேந்திர ஷா ஆகியோரிடம் தொலைபேசியில் பேசினேன்.

நேபாள தோ்தலில் ஆா்எஸ்பி பெற்ற மகத்தான வெற்றிக்கும், அந்நாட்டில் அமைய உள்ள புதிய அரசுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்தியா-நேபாளத்தின் பரஸ்பர வளமை, முன்னேற்றம், நலவாழ்வுக்குப் பணியாற்ற இந்தியா உள்ளாா்ந்த ஈடுபாடு கொண்டிருப்பதாக அவா்களிடம் கூறினேன்.

இந்தியா-நேபாளத்தின் கூட்டு முயற்சிகளால், வரும் ஆண்டுகளில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு புதிய உச்சங்களைத் தொடும் என நம்புகிறேன் என்றாா்.