மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு மார்ச் 12-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுல்தான்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை ஹனுமன்கஞ்சைச் சேர்ந்த பாஜக தலைவர் மிஸ்ரா 2018-ல் மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. புகார்தாரரின் வழக்குரைஞர் சந்தோஷ் குமார் பாண்டே, சிறப்பு நீதிபதி சுபம் வர்மா இந்த வழக்கில் விசாரணையை மார்ச் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, பிப்ரவரி 20 ஆம் தேதி ராகுல் காந்தி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அரசியல் பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதாகவும், தனது வாதத்திற்கு ஆதாரங்களை முன்வைப்பதாகவும் ராகுல் காந்தி கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. நான் யாருக்கும் எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை, யாரையும் அவதூறு செய்யும் நோக்கத்துடன் அத்தகைய மொழியைப் பயன்படுத்தியதில்லை. எனது அறிக்கையைத் திரித்து ஒரு பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி கூறியதாக அவரது வழக்குரைஞர் காஷி பிரசாத் சுக்லா கூறினார்.
இந்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மார்ச் 12-க்கு அடுத்த விசாரணை நடைபெறும் என எம்பி/எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Summary
A special MP/MLA court here on Monday scheduled March 12 for hearing arguments in a 2018 defamation case against Leader of Opposition in the Lok Sabha and Rae Bareli MP Rahul Gandhi related to his remarks against Union Home Minister Amit Shah.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!
எதிர்க்கட்சித் தலைவர்களைவிட வளர்ப்பு நாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ராகுல்?

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை!

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு நாளை ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



