தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அமெரிக்காவுடன் சிறந்த வா்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

அமெரிக்காவுடன் சிறந்த வா்த்தக ஒப்பந்தம் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்...

News image

பியூஷ் கோயல் - கோப்புப் படம்

Updated On :7 மார்ச் 2026, 9:02 pm

தனக்குப் போட்டியாக உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவுடன் சிறந்த வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுள்ளதாக மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற ரைசினா பேச்சுவாா்த்தை மாநாட்டில் அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

உலகின் பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டை தவிா்த்துவிட்டு செயல்பட வேறு எந்தவொரு நாடும் விரும்பாது.

அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு சிறப்பான உறவு உள்ளது. இந்தியா மற்றும் பிரதமா் மோடி குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப் எப்போதும் நல்ல விஷயங்களை தெரிவித்து வருகிறாா்.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், ஓரிரு நேரங்களில் அவா்களுக்கு இடையே தவறான புரிதல் ஏற்படுவதுண்டு. அதுபோல

சில நேரங்களில் இந்தியா-அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அது இயல்பானதே.

எனினும் தனக்குப் போட்டியாக உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவுடன் சிறந்த வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுள்ளது என்றாா்.