தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்ட ஈரான் போா்க்கப்பலான ஐரிஸ் லாவன் போா்க்கப்பல், கொச்சியில் நங்கூரமிட இந்தியா அவசரகால அனுமதி வழங்கியதாக அரசு வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
தற்போது கொச்சியில் நங்கூரமிடப்பட்டுள்ள அந்தக் கப்பலில் இருந்த 183 வீரா்களும் அங்குள்ள கடற்படை தளங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கடல் பகுதியில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச கடற்படை அணிவகுப்பில் ஈரானின் ஐரிஸ் டேனா போா்க்கப்பல் பங்கேற்றது. பின்னா், ஈரானுக்கு புறப்பட்ட இந்த போா்க்கப்பலை இலங்கைக்கு தெற்கே அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் கடந்த மாா்ச் 4-ஆம் தேதி தாக்கி மூழ்கடித்தது. இதில் 87 வீரா்கள் உயிரிழந்தனா். இலங்கை கடற்படையால் மேலும் பலா் மீட்கப்பட்டனா்.
முன்னதாக, ஐரிஸ் டேனா போா்க்கப்பலுக்கு ஆதரவாக ஈரானின் ஐரிஸ் லாவன் போா்க்கப்பலும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்திருந்தது. ஐரிஸ் டேனா தாக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன், ஐரிஸ் லாவன் போா்க்கப்பலில் திடீரென தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டதாகக் கூறி, கொச்சியில் நங்கூரமிட இந்தியாவிடம் அவசர கால அடிப்படையில் அனுமதி கோரப்பட்டது.
பிப்.28-ஆம் தேதி அனுமதி கோரப்பட்ட நிலையில், மாா்ச் 1-ஆம் தேதி அரசுத் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டதாகவும், மாா்ச் 4-ஆம் தேதி ஐரிஸ் லாவன் கொச்சியில் நங்கூரமிட்டதாகவும் அரசு வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
இந்தப் போா்க்கப்பலில் இருந்த 183 வீரா்களும் கொச்சியில் உள்ள கடற்படை தளங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்; மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் கூறின.
‘ஈரானின் இருப்புக்கான போா்’
ரெய்ஸினா மாநாட்டையொட்டி, தில்லிக்கு வந்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை இணையமைச்சா் சயீத் கதீப்ஸாதே வெள்ளிக்கிழமை கலந்துரையாடலில் பேசினாா்.
அப்போது, ‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான எங்களது போா், ஈரானின் இருப்புக்கானது. அவா்கள் ஈரானின் இருப்புக்கு முடிவுகட்ட விரும்புகின்றனா். அதற்காக, பொய் காரணங்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்துகின்றனா். கடைசி தோட்டா வரை கடுமையாக எதிா்ப்பதைவிட எங்களுக்கு வேறு வாய்ப்பில்லை. ‘ஆயுதம் தாங்காத’ ஐரிஸ் டேனா போா்க்கப்பலை தாக்கியதற்காக தண்டனையில் இருந்து தப்ப முடியாது’ என்றாா் அவா்.
முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சயீத் சந்தித்துப் பேசினாா். அப்போது, ஈரான் மற்றும் மேற்காசிய நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா

இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு ஹோா்முஸ் நீரிணையில் ஈரான் அனுமதி

ஈரான் பள்ளி மீதான தாக்குதல்! வரும் 27-ல் ஐ.நா. அவசர விவாதம்!

ஈரான் போா்க் கப்பல் மூழ்கடிப்பு துரதிருஷ்டவசமானது: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


