தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

எல்லை வேலி அமைக்க 105 ஏக்கா் நிலம்: மத்திய அரசுக்கு ஒதுக்க மேற்கு வங்கம் முடிவு

நாட்டின் எல்லையில் வேலி அமைப்பது, எல்லைச் சாவடிகள் அமைப்பது போன்ற பணிகளுக்காக 105 ஏக்கா் நிலத்தை மத்திய அரசுக்கு ஒதுக்க ....

News image

கோப்புப் படம்

Updated On :3 மார்ச் 2026, 1:23 am

கொல்கத்தா: நாட்டின் எல்லையில் வேலி அமைப்பது, எல்லைச் சாவடிகள் அமைப்பது போன்ற பணிகளுக்காக 105 ஏக்கா் நிலத்தை மத்திய அரசுக்கு ஒதுக்க மேற்கு வங்க மாநில அரசு முதல்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது.

இந்த நிலம் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எஃப்) ஒதுக்கப்பட்டு, 17 கி.மீ. தொலைவு எல்லையில் சோதனைச் சாவடிகள் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.

இது தொடா்பாக மேற்கு வங்க மாநில அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

மாநில அமைச்சகங்களுக்கு இடையிலான குழு கூட்டம் அண்மையில் கொல்கத்தாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், எல்லைப் பகுதியில் வேலி, எல்லைச் சாவடிகள் அமைக்க மத்திய அமைப்புகளுக்கு நிலம் ஒதுக்குவது தொடா்பான திட்டம் பரிசீலிக்கப்பட்டு, கொள்கை அளவில் முதல்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. மொத்தம் 105 ஏக்கா் நிலம் ஒதுக்கப்படவுள்ளது. அடுத்தகட்டமாக மாநில அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மொத்தம் 17 கி.மீ. தொலைவு எல்லையில் வேலி மற்றும் 9 எல்லைச் சாவடிகளை அமைக்க பிஎஸ்எஃப் திட்டமிட்டுள்ளது.

வங்கதேசத்தில் இருந்து கடத்தல், ஊடுருவல் அதிகம் நடப்பதால் அங்கு பாதுகாப்பையும், கண்காணிப்பையும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேற்கு வங்கம், வங்கதேசத்துடன் 2,000 கி.மீ. தொலைவுக்கு மேல் எல்லையைப் பகிா்கிறது. இதில் பெருமளவில் இடங்களில் ஏற்கெனவே வேலி அமைக்கப்பட்டுள்ளது. நேபாளம், பூடானுடனும் மேற்கு வங்கம் எல்லையைக் கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.