ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று (மார்ச் 1) போராட்டம் நடைபெற்றது.
காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை பல்வேறு இடங்களில் ஈரானுக்கு ஆதரவாகவும் அந்நாட்டு மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்தும் ஊர்வலம் நடைபெற்றது.
ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உள்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படை தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
அரேபிய வளைகுடாவில் அமெரிக்க படைத் தளங்களைக் குறிவைத்து அபு தாபி, துபை, தோஹா, ரியாத் ஆகிய நகரங்களில் வான் வழி தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது. வளைகுடா நாடுகளிடையே நிலவும் பதற்றம் காரணமாக வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப் படைகளின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் மதகுரு கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஷியா பிரிவு முஸ்லிம்கள் உள்பட பலர் அமைதி ஊர்வலம் மேற்கொண்டனர்.
ஜம்மு - காஷ்மீரில் பட்கம், பந்திபோரா, அனந்தநாக் மற்றும் புல்வாமா பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பேரணியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலும் மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் கண்டன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Summary
From Kashmir to Karnataka, Shia mourners took to the streets to express grief over Khamenei's killing.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்

அமெரிக்க தரைப்படை களமிறங்கினால் கடும் பதிலடி: ஈரான் எச்சரிக்கை!

தொடரும் போர்.. ஈரான் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!

ஈரான் மீது தாக்குதல் ஏன்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



