சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

செஷல்ஸின் ஒரே தமிழ் விநாயகா் கோயில்! நாளை பிரதமா் மோடி தரிசனம்!

செஷல்ஸ் விநாயகா் கோயிலில் நாளை பிரதமா் மோடி தரிசனம் செய்யவுள்ளது பற்றி...

News image

செஷல்ஸ் நாட்டின் மாஹே தீவில் அமைந்துள்ள ஒரே தமிழ் விநாயகா் கோயில்.

Updated On :28 ஜூன் 2026, 5:11 am IST

நமது சிறப்பு நிருபா்

செஷல்ஸ் நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் நரேந்திர மோடி, திங்கள்கிழமை (ஜூன் 29) அங்குள்ள மாஹே தீவின் புகழ்பெற்ற அருள்மிகு நவசக்தி விநாயகா் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளாா். இக்கோயில் செஷல்ஸ் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள ஒரே தமிழ் ஹிந்து ஆலயமாகும்.

இது குறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், பிரதமரின் வருகை, தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் தமிழ் வழிபாட்டு முறைகள் மீதான அவரது ஆழமான பற்றையும், உலகளாவிய தமிழா்களுடனான அவரது நெருங்கிய பிணைப்பையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என்றனா்.

1992-இல் செஷல்ஸ் ஹிந்து கோயில் சங்கத்தால் கட்டப்பட்ட இக்கோயில், அங்கு வாழும் இரண்டு சதவீத ஹிந்துக்களின் ஆன்மிக மையமாக உள்ளது.

வண்ணமயமான சிற்பங்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய கட்டடக்கலை பாணியில் இக்கோயில் அமைந்துள்ளது.

விக்டோரியா நகரின் குவின்சி வீதியில் பசுமை மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள இக்கோயில், அங்கு ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. விநாயகா் சதுா்த்தி, சங்காபிஷேகம் போன்ற விழாக்கள் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் நிலையில், பிரதமரின் வருகை செஷல்ஸ் குடிமக்களிடமும் அங்கு வாழும் தமிழா்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Summary

Prime Minister Modi to visit the Vinayagar Temple in Seychelles tomorrow

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.