அசாமின் குவாஹாட்டியில் இருந்து துபை, அபுதாபி ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கவுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான போக்குவரத்தை எளிதாக்கும் நடவடிக்கையாக, குவாஹாட்டியில் இருந்து அமீரகத்தின் துபை மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நேரடி விமானங்களை இயக்குவதாக இன்று (ஜூன் 25) அறிவித்துள்ளது.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் குவாஹாட்டி - துபை இடையேயான விமான சேவையும், ஆகஸ்ட் 7 முதல் குவாஹாட்டி - அபுதாபி இடையேயான விமான சேவையும் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், குவாஹாட்டி - துபை விமானங்கள் அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும், குவாஹாட்டி - அபுதாபி விமானங்கள் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், வடகிழக்கு இந்தியாவில் இருந்து மேற்காசியாவுக்கு முதல்முறையாக நேரடி விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
Air India Express has announced that it will operate direct flights from Guwahati to Dubai and Abu Dhabi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?

ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு!

ஏர் இந்தியா விமான விபத்து முதலாண்டு நினைவு நாள்! பாதிக்கப்பட்டோர் நிலை என்ன?
ஏர் இந்தியா விமான விபத்து: முதலாண்டு நினைவு நாளில் 2 நிமிட மௌன அஞ்சலி
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani





