நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நீதித் துறை வரலாற்றில் புதிய சாதனை: ஒரே நேரத்தில் 4 பெண் தலைமை நீதிபதிகள்

உயர் நீதிமன்றங்களில் ஒரே நேரத்தில் 4 பெண் தலைமை நீதிபதிகள் குறித்து...

News image

நீதித் துறை வரலாற்றில் புதிய சாதனை - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 9:18 am IST

நாட்டின் உயர் நீதிமன்றங்களில் ஒரே நேரத்தில் 4 பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உயர் நீதிமன்றங்களில் மொத்தமுள்ள 781 நீதிபதிகளில் 116 பேர் (14.85%) பெண் நீதிபதிகள்.

இந்த 116 பெண் நீதிபதிகளில் 4 நீதிபதிகள் ஒரே நேரத்தில் தலைமை நீதிபதிகளாக பதவி வகிப்பதன் மூலம் இந்தியாவின் நீதித் துறையில் புதிய சாதனை படைத்துள்ளனர்.

பாட்னா உயர் நீதிமன்றத்தில் மீனாட்சி மதன்ராய், குஜராத் உயர் நீதிமன்றத்தில் சுனிதா அகர்வால், மேகாலயா உயர் நீதிமன்றத்தில் ரேவதி மோஹிதே தேரே, ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் லிசா கில் ஆகிய நால்வரும் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்து வருகின்றனர். இந்தியாவில் ஒரே நேரத்தில் 4 பெண் நீதிபதிகள் ஒரே நேரத்தில் முழு நேர தலைமை நீதிபதிகளாக இருப்பது இதுவே முதல்முறை.

இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டிலும் இதுபோன்று 4 பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக இருந்திருந்தாலும், அவர்களில் ஒருவர் மட்டும் பொறுப்பு தலைமை நீதிபதியாகவே பணியாற்றி வந்தார்.

Summary

In A First, Four Women High Court Chief Justices In India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.