டெலிகிராம் செயலி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தில்லி உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூன் 18) தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வின் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் செயலி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு பல புகார்கள் வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நீட் மறுதேர்வு முடியும் வரை நாடு முழுவதும் டெலிகிராம் செயலி முடக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்தியாவில் விதிக்கப்பட்ட இந்தத் தற்காலிக தடையை எதிர்த்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது.
அதன்படி, வழக்கின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்ததாவது:
வினாத்தாள் கசிவிலும் நீட் தேர்வு தொடர்பான மோசடி நடவடிக்கைகளுக்கு உதவுவதிலும் டெலிகிராம் சேனல்கள், குழுக்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டது தேசிய தேர்வு முகமையால் (என்டிஏ) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், டெலிகிராம் செயலி உடனடியாக முடக்கப்படவில்லை என்றும் ஆரம்பத்தில் மிகக் குறைந்த நடவடிக்கையே அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய அரசு அதிகாரிகள் கடந்த ஜூன் 3 ஆம் தேதி, டெலிகிராம் பிரதிநிதிகளை ஒரு கூட்டத்துக்கு அழைத்தனர். அந்தக் கூட்டத்தின் போது, கசிந்த தேர்வுத் தாள்களைப் பரப்பும் சேனல்களை முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்துவதில் டெலிகிராம் தவறி வருவதை அரசு சுட்டிக் காட்டியது.
இதுபோன்ற சிக்கல்கள் முன்கூட்டியே கண்டறிவதில் சிக்கல்கள் இருப்பதாக டெலிகிராம் ஒப்புக்கொண்டனர். அதன் பிறகே, டெலிகிராம் முழுவதுமாக முடக்கப்பட்டது.
மேலும், பயங்கரவாதம், சைபர் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், பாலியல் குற்றங்கள், நிதி மோசடிகளுக்கு டெலிகிராம் செயலி பயன்படுகிறது.
டெலிகிராம் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சம் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களைப் எளிதில் கண்டறிய முடிவதில்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
The Delhi High Court stated on Thursday (June 18) that the Telegram app poses a threat to national security.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!

மத்திய அரசின் தடைக்கு எதிர்ப்பு! டெலிகிராம் நிறுவனம் வழக்கு!

சாலைகளையும், மால்களையும்கூட மூட வேண்டும்! டெலிகிராம் கிண்டல்

நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK




