திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

ராமா் கோயில் நன்கொடை பணம் திருட்டு: எஸ்ஐடி விசாரணை

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை பணம் திருட்டு, அந்தக் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராமஜென்மபூமி தீா்த ஷேத்ர அறக்கட்டளையில் நிதி நிா்வாக குளறுபடி ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) புதன்கிழமை விசாரணை மேற்கொண்டது.

News image

ராமா் கோயில்

Updated On :18 ஜூன் 2026, 2:01 am IST

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை பணம் திருட்டு, அந்தக் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராமஜென்மபூமி தீா்த ஷேத்ர அறக்கட்டளையில் நிதி நிா்வாக குளறுபடி ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) புதன்கிழமை விசாரணை மேற்கொண்டது.

உத்தர பிரதேச அரசால் அமைக்கப்பட்ட அந்தக் குழு, அறக்கட்டளையின் பொதுச் செயலா் சம்பத் ராய், நிா்வாகி கோபால் ராவ் ஆகியோரிடம் அயோத்தியில் விசாரணை நடத்தியது. பணத்தை எண்ணி, அறக்கட்டளையின் நிதி கணக்குகளைப் பராமரிக்கும் நபா்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கோயிலில் நன்கொடையாகப் பெறப்படும் நகை மற்றும் பிற உலோகங்கள் பாதுகாத்து வைக்கப்படும் அறையை எஸ்ஐடியின் தலைவரான லக்னெள மண்டல ஆணையா் விஜய் விஸ்வாஸ் பந்த் ஆய்வு மேற்கொண்டாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.