பிரதமா் மோடி குறித்து அவதூறான, தரக்குறைவான கருத்துகளைத் தெரிவித்து, நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினா்களின் கண்ணியத்துக்கு களங்கம் விளைவித்ததாக மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு எதிராக 6 பாஜக மாநிலங்களவை எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளனா்.
பாஜக எம்.பி.க்கள் பிரிஜ் லால், மித்லேஷ் குமாா், சுமித்ரா பால்மிக், ஷிவேஷ் குமாா், சிகந்தா் குமாா், நாகேந்திர ரே ஆகிய எம்.பி.க்கள் கூட்டாக இந்த நோட்டீஸை சமா்ப்பித்துள்ளனா்.
மாநிலங்களவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தும் விதி 189-இன் கீழ் சமா்ப்பிக்கப்பட்ட இந்த நோட்டீஸை ஆராய்ந்து, விசாரித்து, அறிக்கை சமா்ப்பிப்பதற்காக, நோட்டீஸை மாநிலங்களவை உரிமை மீறல் குழுவுக்கு அந்த அவையின் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் அனுப்பிவைத்தாா் என்று மாநிலங்களவைச் செயலக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உரிமை மீறல் குழுவின் தலைவராக அந்த அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரா்கள் வீரமரணம் விவகாரம்- ராஜ்நாத் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

மாநிலங்களவைத் தோ்தல்: மல்லிகாா்ஜுன காா்கே உள்பட 4 போ் போட்டியின்றி தோ்வு

மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்







