கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 3 இளைஞர்கள் காயம்

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 இளைர்கள் காயமடைந்தனர்.

News image

மணிப்பூர்.(கோப்புப்படம்)

Updated On :15 ஜூன் 2026, 2:23 pm IST

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 இளைர்கள் காயமடைந்தனர்.

மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே திங்கள்கிழமை துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கென்லென்மாங் வைபே (18), லுன்லியாண்டாவ் வைபே (20) மற்றும் பாவுகோ லால் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உடனே அவர்கள் பாதுகாப்புப் படையினரால் சிகிச்சைக்காக இம்பாலில் உள்ள பிராந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

தொடர்ந்து, கூடுதல் மத்தியப் படைகள் குவிக்கப்பட்டு மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குகி சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் காங்போக்பி மாவட்டத்தில், திங்கள்கிழமை காலை 6 மணியளவில் லெய்லோன் வைபே கிராமத்திற்கு அருகே இரு பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த ஆயுதமேந்திய நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் மேலும் கூறினர்.

Summary

At least three persons were injured in an exchange of fire between two groups in Manipur's Kangpokpi district on Monday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.