மத்தியப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தலில் வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை (ஜூன் 11) தள்ளுபடி செய்யப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற இருந்த மாநிலங்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், மீனாட்சி நடராஜன் தனது வேட்புமனுவில் அவர் மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டதைக் குறிப்பிடவில்லை என்று பாஜக வேட்பாளர் மகேஷ் கேவத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக விசாரித்த தேர்தல் ஆணையம் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை நிராகரித்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தன்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார் மீனாட்சி நடராஜன்.
இதையடுத்து, வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாளான நேற்று களத்தில் பாஜக வேட்பாளர்கள் மூன்று பேர் மட்டுமே இருந்ததால், அவர்கள் மூவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில், மீனாட்சி நடராஜனின் மனுவை நீதிபதி பிரஷாந்த் குமார் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதைத்தொடர்ந்து, அரசியலமைப்புச் சட்டத்தின் 329-வது பிரிவின்கீழ் உள்ள தடையைக் காரணம் காட்டி, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
Summary
The petition filed by Congress leader Meenakshi Natarajan in the Supreme Court, challenging the rejection of her nomination for the Rajya Sabha election from Madhya Pradesh, was dismissed on Friday (June 11).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களவைத் தோ்தல் வேட்பு மனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் வழக்கு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்

மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மீனாட்சி நடராஜன்!

மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு: முடிவை திரும்பப் பெற வேண்டும்; தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope




