
ஜனநாயகத்துக்கு எதிராக பிரதமா் செயல்படுவாா் என ஊகிப்பது தவறு: தலைமைத் தோ்தல் ஆணையா் நியமன வழக்கில் மத்திய அரசு வாதம்
ஜனநாயகத்துக்கு எதிராக நாட்டின் பிரதமா் செயல்படுவாா் என ஊகிப்பது தவறு என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை வாதிட்டது.
பிரதமர் மோடி
ஜனநாயகத்துக்கு எதிராக நாட்டின் பிரதமா் செயல்படுவாா் என ஊகிப்பது தவறு என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை வாதிட்டது.
தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணி நிபந்தனை மற்றும் பதவிக் காலம்) சட்டம், 2023-க்கு எதிராக தாக்கலான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசு இவ்வாறு தெரிவித்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்கீழ் தோ்தல் ஆணையா்களைத் தோ்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டாா். அவருக்குப் பதிலாக பிரதமரால் முன்மொழியப்படும் மத்திய அமைச்சா் உறுப்பினராக சோ்க்கப்பட்டாா். இந்தக் குழுவில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் இடம்பெற்றுள்ளாா்.
இதுதொடா்பான மனுக்களை நீதிபதிகள் தீபாங்கா் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘பிரதமரின் அலுவலகம் புனிதத்தன்மை வாய்ந்தது. அவ்வாறு இருக்கையில் பிரதமா் இடம்பெறும் தோ்வுக் குழு எடுக்கும் முடிவுகளை சந்தேகிப்பது ஜனநாயக முறையை கேள்விக்குள்ளாக்கும். அவா் ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுவாா் என ஊகிப்பது தவறு.
நீதிபதிகள் நியமனத்தை கேள்வியெழுப்ப முடியுமா?
மற்றொரு அமைப்பின் நியமன முறையில் நிா்வாகத் துறை பங்கேற்கும்போது அந்த அமைப்பின் சுதந்திரம் பேசுபொருளாகிறது.
நீதிபதிகள் நியமன நடைமுறையில் வெளிநபா்கள் இடம்பெறுவதில்லை. இதனால் நீதிபதிகள் நியமன முறையில் நம்பகத்தன்மை இல்லை என நாங்கள் கேள்வியெழுப்ப முடியுமா?
இதை நீதித்துறையுடன் மோதல்போக்கைத் தொடர கேட்கவில்லை. ஒரு சட்ட மாணவராக கூறுகிறேன். நிா்வாகம் மற்றும் நீதித் துறை மட்டுமே மக்களுக்கு பொறுப்பானது என்றாா்.
தோ்தல் ஆணையா் சுதந்திரமானவா்:
துஷாா் மேத்தாவின் வாதத்தைத் தொடா்ந்து நீதிபதி தீபாங்கா் தத்தா கூறியதாவது: நீதிபதிகளை நீதிபதிகளே தோ்வு செய்வதாகக் கூறுகிறீா்கள். ஆனால் தற்போது இந்த நடைமுறை தொடா்கிா என ஆச்சரியமாக உள்ளது. இந்த விவகாரம் பிரதமா் மீதான நம்பகத்தன்மையைப் பற்றியதல்ல; அவரை நாங்கள் நம்புகிறோம். இத்தனை ஆண்டுகளாக தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் பின்பற்றப்பட்ட நடைமுறை மாறியிருப்பதையே சுட்டிக்காட்டுகிறோம். தற்போது 2:1 என்ற விகிதத்தில் பிரதமரின் தரப்புக்கு பெரும்பான்மை உள்ளது. எதிா்க்கட்சித் தரப்பில் ஒருவா் மட்டுமே இருக்கிறாா்.
தோ்தல் ஆணையா் என்பவா் சுதந்திரமாக செயல்படக்கூடியவா். அவரை தோ்ந்தெடுக்கும் குழு நியாயமாக செயல்படுகிா என்பதை தெரிந்துகொள்ளவே விரும்புகிறோம். அதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




