ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!

கர்நாடகத்தில் முகப்பு விளக்கு செயலிழந்ததால் 90 கி.மீ. வரை மொபைல் டார்ச் வெளிச்சத்திலேயே அரசுப் பேருந்தை ஓட்டுநர் இயக்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

Karnataka Bus Without Functioning Headlights Driven Using Phone Torch

கர்நாடகம். - Photo grab X video.

Published On :5 ஜூலை 2026, 5:39 pm IST

கர்நாடகத்தில் முகப்பு விளக்கு செயலிழந்ததால் 90 கி.மீ. வரை மொபைல் டார்ச் வெளிச்சத்திலேயே அரசுப் பேருந்தை ஓட்டுநர் இயக்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம், கலபுரகி நகரிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிஞ்சோலி நகருக்கு அரசின் கடைசிப் பேருந்து இரவுநேரத்தில் வழக்கம்போல் புறப்பட்டு சென்றிருக்கிறது. இந்த நிலையில் பேருந்தின் முகப்பு விளக்கு திடீரென செயலிழந்ததாகக் கூறப்படுகிறது.

இரவு நேரம் என்பதால் அந்த நேரத்தில் பேருந்தை நிறுத்தி சரிசெய்வது என்பது மிகவும் சிரமமான செயல் ஆகும். இந்த சூழலில்தான் நடத்துநர் தனது மொபைல் டார்ச்சைப் பயன்படுத்தி ஓட்டுநருக்கு உதவியுள்ளார். பிறகு ஓட்டுநரும் அந்த மொபைல் வெளிச்சத்திலேயே பேருந்தை இயக்கியிருக்கிறார்.

பயணத்தின் எந்தக் கட்டத்தில் பேருந்தின் முகப்பு விளக்குகள் பழுதடைந்தன என்பது தெரியவில்லை. இருப்பினும், பாதுகாப்பற்ற சூழலிலேயே பயணத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் பயணிகளுக்கு ஏற்பட்டது. தற்போது இதுதொடர்பான விடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் அரசை கடுமையாகச் சாடியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.