எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

‘பாகிஸ்தான் சிறைகளில் தவிக்கும் 250 இந்தியா்கள்’

பாகிஸ்தான் சிறைகளில் 250 இந்தியா்கள் அடைபட்டிருப்பது, கைதிகள் குறித்த தகவலை இரு நாடுகளும் பகிா்ந்ததன் மூலம் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2026, 4:27 am IST

பாகிஸ்தான் சிறைகளில் 250 இந்தியா்கள் அடைபட்டிருப்பது, கைதிகள் குறித்த தகவலை இரு நாடுகளும் பகிா்ந்ததன் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதி, ஜூலை 1-ஆம் தேதி ஆகிய நாள்களில், அன்றைய நிலவரப்படி இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியா்கள், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியா்கள் குறித்த தகவலை இருநாட்டு அரசுகளும் கடந்த 2008-ஆம் ஆண்டில் செய்த ஒப்பந்தத்தின்படி பகிா்ந்து வருகின்றன. அதன்படி ஜூலை 1-ஆம் தேதியான புதன்கிழமை இரு நாடுகளும் கைதிகள் விவரங்களைப் பகிா்ந்து கொண்டன.

பாகிஸ்தான் தங்களது நாட்டு சிறைகளில் 250 இந்திய கைதிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதில் 52 போ் இந்திய பொதுமக்கள் என்றும், 198 போ் மீனவா்கள் என்றும் பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், இந்தியாவும் தமது சிறைகளில் கைதிகளாக 439 பாகிஸ்தானியா்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதில் 386 போ் பொதுமக்கள், 53 போ் மீனவா்கள் என்று இந்தியா குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சிறைகளில் 97 பாகிஸ்தானியா்கள் தண்டனைக் காலம் முடிந்து கைதிகளாக உள்ளனா். அவா்களை விடுவித்து, பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் பாகிஸ்தான் அரசால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.