டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பட்ஜெட் தாக்கல்! ஏற்கெனவே ஜிஎஸ்டியால் மக்கள் சிரமம்: காங்கிரஸ்

நாட்டில் வேலையின்மையும் பண வீக்கமும் பரவலாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகேல் குற்றச்சாட்டு

News image
மத்திய பட்ஜெட்- கோப்புப் படம்
Updated On :31 ஜனவரி 2026, 1:55 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நாட்டில் வேலையின்மையும் பண வீக்கமும் பரவலாக இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல் கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் குறித்து செய்தியாளர்களுடன் பூபேஷ் பகேல் பேசுகையில், “நாளை விடுமுறை நாள் மட்டுமின்றி, ரவிதாஸ் ஜெயந்தியும்கூட. இந்த நாளில் பட்ஜெட் தாக்கல் செய்பவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?

பூபேஷ் பகேல்

பூபேஷ் பகேல்

நாட்டில் பரவலான வேலையின்மை மற்றும் பணவீக்கம் நிலவுகிறது. மேலும், விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கான உரிய நியாயமான விலையைக்கூட பெற முடியவில்லை.

தொழிலாளர்களின் ஒரே நம்பிக்கையாக இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமும் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக ஜிஎஸ்டி-யால் ஏற்கெனவே மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.