டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மும்பையில் குடிசைப் பகுதியில் தீ விபத்து: 8 குடிசைகள் எரிந்து நாசம்

மும்பையில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு குடிசைகள் எரிந்து நாசமாகின.

News image
கோப்புப்படம். - ANI
Updated On :31 ஜனவரி 2026, 12:55 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பையில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு குடிசைகள் எரிந்து நாசமாகின.

மகாராஷ்டிர மாநிலம், கிழக்கு மும்பையின் கோவண்டி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் சனிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பிற அவசரகால மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீ அணைக்கப்பட்டதாக குடிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், தீ விபத்தில் எட்டு குடிசைகள் எரிந்து நாசமாகின.

அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

summary

At least eight shanties were gutted after a fire erupted in a slum in Govandi area of eastern Mumbai on Saturday morning, a civic official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.