வினீத் ஜிண்டால் தாக்கல் செய்த மனுவில், ‘யுஜிசி வழிகாட்டுதலில் ஜாதிய பாகுபாடு என்பதற்கு, எஸ்சி., எஸ்டி., ஓபிசி உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவினருக்கு எதிரான பாகுபாடு என்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ஜாதிய பாகுபாட்டை இடஒதுக்கீடு பிரிவினருக்கானதாக மட்டும் சுருக்குவது, பொதுப் பிரிவு மற்றும் இடஒதுக்கீடு அல்லாத மாணவா்கள் சந்தித்து வரும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் மற்றும் ஜாதி அடையாளம் அடிப்படையிலான பாகுபாடுகளில் இருந்து பாதுகாப்பதில் வெளிப்படையாகத் தவறுவதாக உள்ளது. இது, அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவத்துக்கான உரிமை பிரிவு 14, மதம், ஜாதி, பாலினம், பிறப்பிடம் அடிப்படையிலான பாகுபாட்டை தடுக்கும் பிரிவு 15(1) ஆகியவற்றுக்கு எதிரானதாகும். மேலும், வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிமனித சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-ஐயும் மீறுவதாக உள்ளது. எனவே, இந்த வழிகாட்டுதலை ஜாதிய பாகுபாடற்ற முறையில், அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்ட வகையில் மாற்ற யுஜிசி-க்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.