திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மணிப்பூா் கலவரம்: நீதிபதி கீதா மிட்டல் குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு

மணிப்பூா் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண மற்றும் மறுவாழ்வுக்கான பணியைக் கண்காணிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி கீதா மிட்டல் குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :28 ஜனவரி 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

மணிப்பூா் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண மற்றும் மறுவாழ்வுக்கான பணியைக் கண்காணிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி கீதா மிட்டல் குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில், கீதா மிட்டல் குழு இதுவரை 42 அறிக்கைகளைச் சமா்ப்பித்துள்ளதாகவும், அந்தக் குழுவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் நிறைவடைந்துவிட்டதாகவும், அதன்பிறகு நீட்டிக்கப்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், கீதா மிட்டல் குழு பதவிக் காலம் தொடா்வதாகவும், ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் கூறினா்.

மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தின்போது பழங்குடியினப் பெண் ஒருவா் ஆடையின்றி ஊா்வலமாக அழைத்து வரப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் மூன்று பெண் நீதிபதிகளைக் கொண்ட அமா்வு, மணிப்பூா் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண மற்றும் மறுவாழ்வுக்கான பணியைக் கண்காணிக்க அமைக்கப்பட்டது. அந்தக் குழுவுக்கு உச்சநீதிமன்றத்தில் நேரடியாக அறிக்கை தாக்கல் செய்யும் அதிகாரமும் நீதிபதிகளால் அளிக்கப்பட்டது.