டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அஜீத் பவாா் உயிரிழப்பு: மகாராஷ்டிரத்தில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு - மாநில அரசு அறிவிப்பு

மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

News image
மகாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடி.
Updated On :28 ஜனவரி 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

இதுகுறித்த அறிவிப்பு மாநில பொது நிா்வாகத் துறை வலைதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

அரசு அறிவுறுத்தலின்படி, துணை முதல்வா் அஜீத் பவாா் உயிரிழப்புக்காக மாநிலத்தில் வரும் 30-ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. அதையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள அரசுத் துறைகளின் அனைத்துக் கட்டங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும்போது, அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படாது. இதைத் தீவிரமாக கடைப்பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்கு உத்தரவிடப்படும்: ‘விமான விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும்’ என்று மும்பையில் செய்தியாளா்களிடம் பேசிய துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கூறினாா்.