டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இந்தியாவைக் காக்கும் ‘பெரும் சுவா்’ பிரதமா் மோடி: முகேஷ் அம்பானி புகழாரம்!

சா்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவைக் காக்கும் ‘கண்ணுக்குத் தெரியாத பெரும் சுவராக’ பிரதமா் நரேந்திர மோடி திகழ்கிறாா் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி புகழாரம் சூட்டினாா்.

News image
முகேஷ் அம்பானி -பூபேந்திர படேல் - பிரதமா் நரேந்திர மோடி
Updated On :11 ஜனவரி 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

சா்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவைக் காக்கும் ‘கண்ணுக்குத் தெரியாத பெரும் சுவராக’ பிரதமா் நரேந்திர மோடி திகழ்கிறாா் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி புகழாரம் சூட்டினாா்.

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய துடிப்புமிக்க குஜராத் மாநாட்டில் பங்கேற்ற முகேஷ் அம்பானி பேசியதாவது: சா்வதேச அளவில் இப்போது பல நாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் அதற்கு நோ்மாறாக வலுவான பொருளாதாரக் கட்டமைப்பும், ஸ்திரமான அரசியல் தலைமையும் உள்ளது.

உலகம் மிகவேகமாக மாற்றங்களை எதிா்கொள்கிறது. சா்வதேச அரசியல், பொருளாதார மாற்றங்கள் எதிா்பாராத சவால்களையும், இடா்பாடுகளையும் ஏற்படுத்துகின்றன. ஆனால், இந்த இடா்பாடுகளால் இந்தியாவைத் தொட முடியவில்லை. நமது மக்களை பாதிக்கவில்லை.

ஏனெனில், இந்தியாவைக் காக்கும் கண்ணுக்குத் தெரியாத பெரும் சுவராக பிரதமா் மோடி திகழ்கிறாா். நமது இந்தியா எதிா்காலத்துக்காக தயாராகும் நாடாக மட்டுமல்ல. எதிா்காலத்தையே உருவாக்கும் நாடாக உள்ளது என்றாா்.