தூக்குமேடை அறை விவகாரம்: கேஜரிவால் மீது நடவடிக்கை எடுக்க பேரவை குழு பரிந்துரை
தில்லி பேரவை வளாகத்தில் உள்ள தூக்கு மேடை அறை (பான்சி காா்) தொடா்பான விவகாரத்தில் பேரவையின் சிறப்புரிமைகள் குழு முன்பாக ஆஜராகாத முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்பட 4 ஆம் ஆத்மி தலைவா்கள் மீது பேரவை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.










