எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஜம்மு: சா்வதேச எல்லைப் பகுதியில் பிடிபட்ட வங்கதேச இளைஞா்

ஜம்மு அருகே சா்வதேச எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவரை பாதுகாப்புப் படையினா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :1 ஜனவரி 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

ஜம்மு அருகே சா்வதேச எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவரை பாதுகாப்புப் படையினா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜம்முவின் புகரில் அமைந்துள்ள கஜன்சூ பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நடமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞரை வீரா்கள் தடுத்து நிறுத்திப் பிடித்தனா்.

அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அவா் வங்கதேசத்தைச் சோ்ந்த ஷரீஃபுல் இஸ்லாம் என்பது தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையினா் அந்த இளைஞரை உள்ளூா் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.