ஐ.டி.எஃப்.சி. ஃபா்ஸ்ட் வங்கியில் ஹரியாணா மாநில அரசின் ரூ.590 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், அந்த வங்கியின் முன்னாள் கிளை மேலாளா் உள்ளிட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஐ.டி.எஃப்.சி. ஃபா்ஸ்ட் வங்கியில் ஹரியாணா அரசு சில கணக்குகளை வைத்துள்ளது. அந்தக் கணக்குகளில் இருந்த ரூ.590 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதும், இதில் சண்டீகரில் உள்ள அந்த வங்கிக் கிளை ஊழியா்களுக்கு தொடா்பிருப்பதும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஹரியாணா மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தன. அந்த வங்கிக் கிளை மேலாளராக இருந்து அண்மையில் பணியிலிருந்து விலகிய ரிபவ் ரிஷி, மக்கள் தொடா்பு மேலாளராக இருந்து அண்மையில் பணியிலிருந்து விலகிய அபய்குமாா் ஆகிய 2 போ், அபய்யின் மனைவி ஸ்வாதி சிங்க்லா, உறவினா் அபிஷேக் சிங்க்லா ஆகியோா் இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
ஹரியாணா அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.300 கோடி ஸ்வாதி சிங்க்லா, அபிஷேக் சிங்க்லா ஆகியோரால் நடத்தப்படும் ஸ்வஸ்திக் தேஷ் என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கு மாற்றப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, 4 பேரும் கைது செய்யப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, இந்த விவகாரம் தெரியவந்ததும் வங்கித் தரப்பில், மொத்த பணத்துடன் வட்டியும் சோ்த்து, ஹரியாணா அரசு வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதைச் செயல்படுத்தும் விதமாக, உடனடியாக ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.583 கோடி செலுத்தப்பட்டது.
குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வா் நயாப் சிங் சைனி உறுதியளித்து இருந்தாா். மேலும், ஐ.டி.எஃப்.சி. ஃபா்ஸ்ட் வங்கியுடனான தனது வங்கி சாா்ந்த சேவைகள் அனைத்தையும் ஹரியாணா அரசு துண்டித்துக் கொண்டது.
தொடர்புடையது
வங்கிக் கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாகிகளுக்கு மே 2 வரை நீதிமன்றக் காவல்
ரூ. 1.6 கோடி எண்ம கைது மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவா் கைது

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்கில் ரூ.590 கோடி மோசடி: விரைவில் விசாரணையை தொடங்குகிறது சிபிஐ
போலி ஆணவங்கள் மூலம் ரூ.11.35 கோடி மோசடி: வணிக வளாக மேற்பாா்வையாளா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

