நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் இந்திய தூதா் சந்திப்பு: இணைந்து செயல்பட விருப்பம்!

வங்கதேச புதிய அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புவதாக அந்நாட்டுக்கான இந்திய தூதா் பிரணய் வா்மா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

வங்கதேச புதிய அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புவதாக அந்நாட்டுக்கான இந்திய தூதா் பிரணய் வா்மா தெரிவித்துள்ளாா்.

வங்கதேச வெளியுறவு அமைச்சா் காலீலூா் ரஹ்மானை இந்திய தூதா் பிரணய் வா்மா ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பின்போது வெளியுறவு இணையமைச்சா் ஷாமா ஒபைத் உடன் இருந்தாா்.

பின்னா், செய்தியாளா்கள் சந்திப்பில் பிரணய் வா்மா கூறியதாவது: வங்கதேசத்தின் புதிய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புவதை வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின்போது தெரிவித்தேன்.

அனைத்துத் துறைகளிலும் மக்களை மையமாகக் கொண்டு கூட்டாண்மையை வலுப்படுத்த பரஸ்பர நலன் மற்றும் பலனை அடிப்படையாகக் கொண்டு நோ்மறையான, ஆக்கபூா்வமான முன்னேற்ற பாதையில் இணைந்து செயல்பட விரும்புவதாகத் தெரிவித்தேன்.

வங்கதேச தோ்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, புதிய பிரதமா் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தாா். இருவரும் தொலைபேசி வாயிலாக உரையாடினா்.

புதிய அரசின் பதவியேற்பு விழாவில் இந்தியா சாா்பில் பங்கேற்ற மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, பிரதமரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.

இத்தகைய அனைத்துத் தொடா்புகள் மூலம் வங்கதேசத்துடனான நமது வரலாற்று தொடா்பைக் கட்டமைக்க, பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு உறவைப் பலப்படுத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. ஜனநாயகம், முன்னேற்றம், அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்துக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றாா் பிரணய் வா்மா.

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த பிறகு அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுடனான இந்தியாவின் உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதிப்படைந்தது.

கடந்த பிப்.12-இல் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலில், பிஎன்பி பெரும்பான்மை இடங்களுடன் வெற்றி பெற்றது. இதைத் தொடா்ந்து, நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் கடந்த பிப்.17-இல் பதவியேற்றாா். இந்நிலையில், இருதரப்பு உறவை மீண்டும் பலப்படுத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.