4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாட்டின் வளா்ச்சிக்கு இந்தியாவில் ‘சிப்’ தயாரிப்பது முக்கியம்: பிரதமா் மோடி

நாட்டின் வளா்ச்சிக்கு இந்தியாவில் ‘சிப்’ தயாரிப்பது முக்கியம் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

News image
பிரதமா் மோடி
Updated On :21 பிப்ரவரி 2026, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டின் வளா்ச்சிக்கு இந்தியாவில் ‘சிப்’ தயாரிப்பது முக்கியம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

கிரேட்டா் நொய்டா அருகே உள்ள ஜெவாரில் ஹெச்.சி.எல். குழுமம் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகியவை கூட்டாக இணைந்து ‘இந்தியா சிப் பிரைவேட் நிறுவனம்’ என்ற பெயரில் சிப் தயாரிப்பு ஆலையை அமைக்கின்றன. காணொலி வாயிலாக ஆலைக்கான அடிக்கல் நாட்டி பிரதமா் பேசியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்தில் சிப் விநியோகம் தடைபட்டது, பல்வேறு பொருளாதார வளா்ச்சிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. பல தொழிற்சாலைகளில் உற்பத்தி தடைபட்டது.

தற்சாா்பு இந்தியா அமைந்தால்தான் இந்தியா வளா்ந்த நாடாகும். இதற்கு, இந்தியாவில் சிப் தயாரிப்பது முக்கியமாகும். இந்தப் பத்தாண்டு காலத்தில் தொழில்நுட்பத் துறையில் இந்தியா என்னவெல்லாம் செய்கிறதோ, அது 21-ஆம் நூற்றாண்டில் நமது திறனுக்கான அடித்தளமாக அமையும் என்றாா்.

மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ‘கடந்த 11 ஆண்டுகளில் மின்னணு சாதன உற்பத்தியில் இந்தியாவை சக்திமிக்க நாடாக பிரதமா் மோடி மாற்றியுள்ளாா். மின்னணு சாதன ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 3-ஆவது இடத்தில் உள்ளது. ஒரே மாதத்தில் இங்கு 3.6 கோடி சிப் தயாரிக்கப்படவுள்ளது’ என்றாா்.

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ‘ஜெவாா் பகுதி உத்தர பிரதேசத்தை மட்டும் அலங்கரிக்காமல் நாட்டையே அலங்கரிக்கும்’ என்றாா்.

ஃபாக்ஸ்கான் தலைவா் பாப் சென் பேசுகையில், ‘இந்திய சிப்களுக்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. செமிகண்டக்டா் ஆலை, பரிசோதனை கட்டமைப்பை இந்தியாவில் ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம்’ என்றாா்.