டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அருணாச்சலம், மிசோரம் மாநில நாளை முன்னிட்டு முர்மு வாழ்த்து!

அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநில நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது நல்வாழ்த்துகள் குறித்து...

News image
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Updated On :20 பிப்ரவரி 2026, 5:28 am

இணையதளச் செய்திப் பிரிவு

அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநில நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய இரு மாநிலங்களின் மாநில நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அருணாச்சலப் பிரதேசம், மிசோரமுக்கு மாநில நாள் நல்வாழ்த்துகள்!

இரு மாநிலங்களும் இயற்கை அழகுகளால் அனைவரையும் கவர்ந்து வரும் அழகான மாநிலங்கள், வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் தொழில்முனைவோர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மாநிலங்கள்.

இரு மாநிலங்களும் தங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புடன் தொடர்ந்து ஊக்கமளிப்பதாக கூறினார்.

மேலும், இரு மாநில மக்களும் நிலையான முன்னேற்றம் மற்றும் தொடர்ந்து செழித்து வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.