டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் விலகல்

காங்கிரஸ் கட்சியில் இருந்து அசாமின் முன்னாள் மாநிலத் தலைவர் பூபென் குமார் போரா விலகியுள்ளார்.

News image
- PTI
Updated On :16 பிப்ரவரி 2026, 7:25 am

இணையதளச் செய்திப் பிரிவு

காங்கிரஸ் கட்சியில் இருந்து அசாமின் முன்னாள் மாநிலத் தலைவர் பூபென் குமார் போரா விலகியுள்ளார்.

தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு போரா தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சித் தலைமையால் தான் புறக்கணிக்கப்பட்டதாகவும், மாநிலப் பிரிவில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பட்டுள்ளார்.

2021 முதல் 2025 வரை அசாம் காங்கிரஸ் மாநிலத் தலைவராக போரா இருந்தார். கடந்த ஆண்டு அவருக்குப் பதிலாக கௌரவ் கோகோய் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ராஜிநாமா செய்த பூபென் குமார், இரண்டு முறை அசாமின் பிஹ்புரியா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

அசாமில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பூபென் குமாரின் விலகல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

summary

In a major jolt to the Congress ahead of the Assembly polls in Assam, the party's former state unit chief Bhupen Kumar Borah has resigned, according to sources.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.