டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் கலந்துகொள்வதில் என்ன தவறு: ஏக்நாத் ஷிண்டே

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் கலந்து கொள்வதில் என்ன தவறு என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேள்வி

News image
ஏக்நாத் ஷிண்டே | சல்மான் கான்
Updated On :11 பிப்ரவரி 2026, 9:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் கலந்து கொள்வதில் என்ன தவறு என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டது குறித்து ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், சல்மான் கான் ஓர் இந்தியர். அவர் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை நம்புகிறவர். அவரை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு அழைப்பதில் என்ன தவறு?

ஆர்எஸ்எஸ் ஒரு தேச பக்தி கொண்ட அமைப்பு. ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒவ்வொரு பிரிவிலும் தேச பக்தி ஊக்குவிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் கலந்து கொள்வது அவருக்கான அழைப்பா அல்லது இந்து சங்கங்களில் முஸ்லிம்களும் வரவேற்கப்படுகிறார்கள் என்ற அறிவிப்பா? என்று சிவசேனையின் (உத்தவ் தாக்கரே) கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில்தான், சிவசேனையின் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.