ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

நரவணேவை நம்ப மாட்டீர்களா? பொய் கூறுவாரா? ராகுல் கேள்வி!

நரவணே நூல் விவகாரத்தில் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகள்...

News image

ராகுல் காந்தி (கோப்புப்படம்) - ANI

Updated On :10 பிப்ரவரி 2026, 6:39 am

இந்திய ராணுவ முன்னாள் தளபதி எம்.எம். நரவணே ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) சுயசரிதை நூல் விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

மக்களவையில், நரவணேயின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரிகளை மேற்கோள்காட்டி, 2020 ஆம் ஆண்டு லடாக் எல்லை விவகாரத்தில் சீனா உடனான மோதலின்போது பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதாக ராகுல் காந்தி விமர்சித்துப் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, வெளியாகாத நூலை ராகுல் காந்தி மேற்கோள்காட்டியதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், இந்த நூல் இணையதளங்களில் விற்பனைக்குள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி நூலுக்கான உரிமத்தை வைத்துள்ள பென்குயின் ரேன்டம் ஹவுஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நரவணேவின் நூலை இன்னும் வெளியிடவில்லை என்று விளக்கம் அளித்திருந்தது.

இந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக வெளியாகாத முன்னாள் ராணுவத் தளபதி நரவணே நாலின் பிரதிகள் சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பதிலளித்த ராகுல் காந்தி தெரிவித்ததாவது:

“நரவணே வெளியிட்ட எக்ஸ் பதிவில், எனது நூலை வாங்குவதற்கு இந்த இணைப்பை பின்தொடரவும் என்று தெரிவித்துள்ளார். நரவணே பொய் சொல்கிறாரா? அல்லது பென்குயின் பொய் சொல்கிறதா? என்பதே எனது கேள்வி. முன்னாள் ராணுவத் தளபதி பொய் சொல்ல மாட்டார் என்று நான் நம்புகிறேன்.

புத்தகம் வெளியிடப்படவில்லை என்று பென்குயின் கூறுகிறார். ஆனால் புத்தகம் அமேசானில் கிடைக்கிறது. பென்குயின் நிறுவனத்தைவிட நரவணேவை அதிகம் நம்புகிறேன். நீங்கள் நரவணேவைவிட பென்குயின் நிறுவனத்தை நம்புகிறீர்களா?

பிரதமருக்கும், இந்திய அரசுக்கும் இடையூறு கொடுக்கக் கூடிய தகவல்களை தனது நூலில் நரவணே வெளியிட்டுள்ளார் என்று நான் நம்புகிறேன். பென்குயின் அல்லது ராணுவத் தளபதி, இவர்களில் யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Won't you trust Naravane? Will he lie? Rahul asks!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.