இதை எதிா்த்து சமூக ஆா்வலா் ஹரிசரண் தேவ்கன், மருத்துவா்கள் செளரவ் குமாா், லக்ஷ்யா மிட்டல், ஆகாஷ் சோனி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தகுதி மதிப்பெண் குறைப்பது அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 21-க்கு எதிரானது. மாணவா் சோ்க்கை நடைமுறைகள் தொடங்கிவிட்ட பிறகு, தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க முடியாது. ஏனெனில், சோ்க்கை அறிவிக்கையைப் பாா்த்து, பலா் தங்களின் பணித் தோ்வை ஏற்கெனவே தீா்மானித்திருப்பா். எனவே, சோ்க்கைக்கு இடையே தகுதி மதிப்பெண்ணைக் குறைப்பது, அவ்வாறு பணி வாய்ப்பைத் தீா்மானித்தவா்களின் முதுநிலை படிப்புக்கான வாய்ப்பை மறுப்பதாக அமையும். மேலும், முதுநிலை மருத்துவப் படிப்பை வணிக ரீதியிலான நடைமுறையாக பரிசீலிக்க முடியாது. முதுநிலை மருத்துவப் படிப்பின் தரம் சமரசம் செய்யப்படுவதை தடுப்பது அதிகாரிகளின் கடமை என அதில் குறிப்பிடப்பட்டது.