ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சத்தீஸ்கரில் 8 பெண்கள் உள்பட 12 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளது குறித்து...

News image
சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்...
Updated On :5 பிப்ரவரி 2026, 10:28 am

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் செயல்பட்டு வந்த 12 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

பிஜப்பூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 8 பெண்கள் உள்பட 12 மாவோயிஸ்டுகள் இன்று (பிப். 5) காவல் துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஏகே - 47 மற்றும் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள், வெடி பொருள்கள் ஆகியவற்றை அவர்கள் தாங்களாகவே முன்வந்து பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், அவர்களைப் பிடிக்கக் கூட்டாக ரூ.54 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள்படி சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளின் மறுவாழ்விற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

முன்னதாக, பிஜப்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 888 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். மேலும், 231 பேர் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், வரும் மார்ச் 31-க்குள் நாட்டிலுள்ள மாவோயிஸ்டுகள் முழுவதுமாக அழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.