டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

எப்போதும்போல அப்பட்டமான பொய்: பிரதமர் மோடி உரையாடல் மீது காங்கிரஸ் விமர்சனம்

மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் உரையை அப்பட்டமான பொய் என்று காங்கிரஸ் விமர்சனம்

News image
பிரதமர் மோடி.- பிடிஐ
Updated On :5 பிப்ரவரி 2026, 3:05 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை அப்பட்டமான பொய் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

பிரதமரின் உரையை விமர்சித்த காங்கிரஸின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், "மாநிலங்களவையில் 97 நிமிடங்கள் நீடித்த பிரதமரின் உரை, மற்றொரு தேர்தல் பேரணியாகவே இருந்தது. எப்போதும் போலவே, இதிலும் தவறான வழிநடத்தல், தாக்குதல்கள், திரித்துப் பேசுதல், நாடகங்களும் இடம்பெற்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, "காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து தங்கள் கஜானாவை மட்டுமே நிரப்பிக் கொள்ள மும்முரம் காட்டின.

ஆனால், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.