டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மின்னணு உற்பத்தித் துறைக்கு ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு!

மின்னணு உற்பத்தித் துறைக்கான திட்டச் செலவினம் 2026-27 பட்ஜெட்டில் ரூ. 40,000 கோடியாக உயா்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

மின்னணு உற்பத்தித் துறைக்கான திட்டச் செலவினம் 2026-27 பட்ஜெட்டில் ரூ. 40,000 கோடியாக உயா்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியதாவது: நாட்டில் மின்னணு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த அந்தத் துறைக்கு ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அதன் கீழ், மூலதனப் பொருள்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு இடங்களில் உயா் தொழில்நுட்ப உபகரண அறைகள் உருவாக்கப்படும். உலகளாவிய போட்டித் தன்மையை உருவாக்கும் வகையில் கன்டெய்னா் தயாரிப்புத் திட்டம் செயல்படுத்தபப்டும். ரசாயனங்களுக்கு இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்தும் வகையில் 3 பிரத்யேக ரசாயன பூங்காக்கள் அமைக்கப்படும் என்றாா்.

மேலும், நாட்டில் கைப்பேசி உற்பத்திப் பிரிவின் உற்பத்தி மதிப்பு 30 மடங்காக அதிகரித்துள்ளது. 2015-ஆம் நிதியாண்டில் இதன் உற்பத்தி மதிப்பு ரூ. 18,000 கோடியாக இருந்தது 2025 நிதியாண்டில் ரூ. 5.45 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஐஃபோன் கைப்பேசி மதிப்பு 2025-இல் ரூ. 2.03 லட்சம் கோடி என்ற அளவை எட்டியுள்து. இது, 2024-இல் ரூ. 1.1 லட்சம் கோடி மதிப்பில் ஆப்பிள் ஐஃபோன் ஏற்றுமதி செய்யப்பட்டதைவிட இரு மடங்காகும்.

நிகழ் நிதியாண்டு இறுதியில், நாட்டின் கைப்பேசி உற்பத்தி மதிப்பு ரூ. 6.76 லட்சம் கோடி என்ற அளவை எட்டும் எனவும், ஏற்றுமதி ரூ. 2.7 லட்சம் கோடியைக் கடக்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

செமிகண்டக்டா் உற்பத்தியைப் பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, 6 மாநிலங்களில் ரூ. 1.6 லட்சம் கோடி முதலீட்டில், 10 செமிகண்டக்டா் உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.