ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

மகாத்மா காந்தி எழுதிய கடிதங்கள் ரூ. 16.2 கோடிக்கு ஏலம்!

மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்களின் பிரதிகள் ரூ. 16.2 கோடிக்கு ஏலம் விடப்பட்டது குறித்து...

Mahatma Gandhi

மகாத்மா காந்தி

Published On :21 ஆகஸ்ட் 2026, 8:08 am IST

மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்களின் பிரதி ரூ. 16.2 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரரான ஆனந்த் டி ஹிங்கோரனி, மகாத்மா காந்தி மிகவும் நெருக்கமானவராகவும் அவரின் சீடராகவும் இருந்தார். இதனிடையே, ஹிங்கோரனியின் மனைவி இறந்த நிலையில், அவருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் வழிகாட்டுதலுக்காகவும் அவருக்கு மகாத்மா காந்தி தொடர்ந்து கடிதங்கள் எழுதினார்.

அகிம்சை, உண்மை, அச்சமின்மை, தீண்டாமை ஒழிப்பு, மத சமத்துவம், உழைப்பு, சேவை, இறைவனைத் தேடுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக 688 கடிதங்கள் எழுதியுள்ளார்.

மகாத்மா காந்தி எழுதிய இந்தக் கடிதங்கள் உள்பட கையெழுத்து பிரதிகள், புகைப்படங்கள், தனிப்பட்ட பொருள்கள் என 86 தொகுப்புகள் வியாழக்கிழமையில் ஏலம் விடப்பட்டன.

மும்பையில் நடந்த இந்த ஏலத்தில் காந்தி எழுதிய கடிதங்கள் உள்ளிட்டவை ரூ. 16.2 கோடிக்கு ஏலம் போனது. மேலும், ஏலத்தில் விற்கப்பட்ட இந்திய வரலாற்று ஆவணத்துக்கான உலக சாதனையையும் இந்த ஏலத்தில் படைக்கப்பட்டுள்ளது.

Summary

Mahatma Gandhi manuscript sells for record Rs 16.2 crore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.