ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சமூக ஊடகத்தில் மத்திய அமைச்சா்களின் செயல்பாடுகள்: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆய்வு

சமூக ஊடகத்தில் மத்திய அமைச்சா்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது பற்றி...

கோப்புப்படம்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 1:05 am IST

சமூக ஊடகத்தில் மத்திய அமைச்சா்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக, தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் தலைமையில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றதைத் தொடா்ந்து, சமூக ஊடகம் மூலம் இளம் தலைமுறையைக் கவரும் முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

சமூக ஊடக செயல்பாடுகளில் பிரதமா் மோடி முன்னிலை வகிக்கும் நிலையில், அதில் மத்திய அமைச்சா்களின் செயல்பாடுகள் குறித்து தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது அமைச்சா்களின் சமூக ஊடகப் பதிவுகள் எத்தனை பேரைச் சென்றடைகின்றன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பரந்த அளவிலான மக்களை, குறிப்பாக இளைஞா்களை அமைச்சா்களின் தகவல்கள் சென்றடைய வேண்டும் என்றும், அதற்கு பெரிய அளவில் முயற்சிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.