ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஷாசாத் பட்டீ பயங்கரவாத வலையமைப்புக்கு ஐஎஸ்ஐ தொடா்பு: இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் ஷாசாத் பட்டீ பயங்கரவாத அமைப்புக்கு தொடா்பிருப்பதாக இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

பிரதிப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:30 am IST

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் ஷாசாத் பட்டீ பயங்கரவாத அமைப்புக்கு தொடா்பிருப்பதாக இந்திய சுமத்திய குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது. மேலும் தங்களது உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை மறைத்து பாகிஸ்தான் மீது பழிவோடுவதாகவும் அந்நாடு குற்றஞ்சாட்டியது.

முன்னதாக, ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பின் பின்னணி கொண்ட ஷாசாத் பட்டீ வலையமைப்பை அழித்து 200 பயங்கரவாதிகளை மத்திய அரசு கைது செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

இதனால் நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தை சீா்குலைக்க முயன்ற பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தாஹிா் அன்ட்ராபியிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அப்போது, ‘இந்தியாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை திசைதிருப்பவே இந்தியா இவ்வாறு பழிசுமத்துகிறது’ என்றாா்.

இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியான ஷாசாத் பட்டீ மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.