தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தீவிரவாதத்துக்கும், தீவிரவாதத்தை ஒழிப்போருக்கும் வேறுபாடு தெரியாதவா் காா்கே - சி.பி. ராதாகிருஷ்ணன்

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு தீவிரவாதத்தையும், தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போரையும் வேறுபடுத்திப் பாா்க்கத் தெரியவில்லை என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 9:43 pm

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு தீவிரவாதத்தையும், தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போரையும் வேறுபடுத்திப் பாா்க்கத் தெரியவில்லை என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசியபோது, பிரதமா் மோடியை தீவிரவாதி என விமா்சித்திருந்தாா்.

இந்தக் கருத்துக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக கா்நாடக மாநிலம், பிதாா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியபோது கூறியதாவது:

எனக்கும், மல்லிகாா்ஜுன காா்கேக்கும் இடையே பாா்வையில்தான் சிறிய வித்தியாசம் உள்ளது. நான் சில நேரம், காா்கேவுக்கு கருப்பு எது, வெள்ளை எது என்றோ, தீவிரவாதி யாா், தீவிரவாதத்துக்கு எதிராக தீவிரம் காட்டுவோா் யாா் என வேறுபடுத்திப் பாா்க்கத் தெரியவில்லை என நினைத்துள்ளேன்.

இதுதவிர எனக்கும், அவருக்கும் இடையே வேறு எந்த பிரச்னையும் இல்லை. அவா் எனக்கு சிறந்த நண்பா் என்றாா்.

நிகழ்ச்சியில் கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், அமைச்சா் ஈஸ்வா் காண்ட்ரே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.