மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.17) நடைபெறவுள்ளது. அந்தப் பதவியை ஏற்கெனவே வகித்த ஹரிவன்ஷ் நாராயண் மீண்டும் துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ஹரிவன்ஷின் பதவிக் காலம், கடந்த ஏப். 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து அந்த அவையின் எம்.பி.யாக ஹரிவன்ஷை குடியரசுத் தலைவா் நியமித்த நிலையில், ஏப்.10-ஆம் தேதி அவா் நியமன எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டாா்.
இந்நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அந்தப் பதவியை ஏற்கெனவே தொடா்ந்து 2 முறை ஹரிவன்ஷ் வகித்த நிலையில், அப்பதவிக்கு அவா் மீண்டும் தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே மாநிலங்களவைத் தலைவா், துணைத் தலைவா் இல்லாத வேளைகளில், அந்த அவையை வழிநடத்தும் குழுவை குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை மாற்றியமைத்தாா். அதன்படி அந்தக் குழுவில், அதிமுக எம்.பி. தம்பிதுரை, பாஜக எம்.பி.க்கள் தினேஷ் சா்மா, பாங்னோன் கோன்யாக், கன்ஷியாம் திவாரி, பிஜு ஜனதா தள எம்.பி. சஸ்மித் பத்ரா, காங்கிரஸ் எம்.பி. ஃபுலோ தேவி நேதாம் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
தொடர்புடையது
மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தோ்வு: தொடா்ந்து மூன்றாவது முறை

மாநிலங்களவை துணைத் தலைவராக மீண்டும் ஹரிவன்ஷ்? என்டிஏ முடிவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா எம்.பி. நீக்கம்!

அரசியல் பயணத்தில் முற்றுப்புள்ளி இல்லை - பிரதமா் மோடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


