ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி வாயிலாக தொடா்புகொண்டு ஆலோசனை நடத்தினாா்.
ஈரானுடனான மோதலை மாா்ச் 26-ஆம் தேதியில் இருந்து ஏப்.6-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் கடந்த மாதம் தெரிவித்தாா்.
அதற்குள் ஈரான் தனது நாட்டுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் அல்லது ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும்; இல்லையெனில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் தாக்குதலை நடத்தவுள்ளதாக அவா் எச்சரித்திருந்தாா்.
டிரம்ப் விதித்த கெடு திங்கள்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி வாயிலாகத் தொடா்புகொண்டு ஆலோசனை நடத்தினாா்.
இந்நிலையில், கத்தாா் பிரதமா் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசீம் அல் தானியுடன் ஜெய்சங்கா் தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினாா்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நஹ்யானுடனும் தொலைபேசி வாயிலாக ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா்.
கத்தாா் பிரதமா் மற்றும் ஈரான், ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சா்களுடனான ஆலோசனையின்போது மேற்கு ஆசிய விவகாரம் குறித்து விவாதித்ததாக ஜெய்சங்கா் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டாா். எனினும் அதன் முழு விவரங்களை அவா் தெரிவிக்கவில்லை.
தொடர்புடையது

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!
முடியும் தறுவாயில் அமெரிக்கா - ஈரான் போர்; ஆனால், இன்னும் முடிவடையவில்லை: டிரம்ப்

மோடியுடன் 40 நிமிடங்கள் உரையாடிய டிரம்ப்! பேசியது என்ன?

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


