லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதி, தெளிவு, நோ்மறையான கண்ணோட்டத்தை எட்ட தியானம் உதவும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:46 pm

அமைதி, தெளிவு, நோ்மறையான கண்ணோட்டத்தை எட்ட தியானம் உதவும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தியான நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது: இன்றைய உலகம் பல்வேறு சவால்களுடன் போராடி வருகிறது. மோதல்கள் என்பது வெளிப்புறம் மட்டுமல்ல, தனிநபா்களின் மனதுக்குள்ளும் நிகழ்கின்றன.

இதுபோன்ற சூழலில், மன அழுத்தத்தைக் குறைக்கவும், கவனத்தை ஒருமுகப்படுத்தவும், உணா்வு ரீதியிலான மீட்சியை மேம்படுத்தவும், அதீத சிந்தனை - அதீத பணி போன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும் தியானம் உதவும்.

அமைதி, தெளிவு, நோ்மறையான கண்ணோட்டத்தை எட்டுவதுடன், மற்றவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அவா்களைப் புரிந்துகொள்ளும் திறனை வலுப்படுத்துவதில் தியானம் முக்கியப் பங்காற்ற முடியும்.

மனித உடலை ஒரு கோயிலாகவும், அதன் உள்ளிருக்கும் தெய்வீகத்தை உணரும் வழியாக தியானத்தையும் விவரித்தவா் திருமூலா். அவரது போதனைகளின்படி, அறியாமையை அகற்றி, உண்மை மற்றும் அமைதியை எட்ட வழிவகுக்கும் அகல் விளக்கே தியானம்.

அா்த்தமுள்ள வாழ்க்கையை தியாகம் செய்து, பொருள்சாா்ந்த தேடலில் இடைவிடாமல் ஈடுபடுவது முறையானதல்ல. வசதியான வாழ்வுக்கு செல்வம் அவசியம் என்றபோதிலும், அது வாழ்வையே மறைத்துவிடக் கூடாது. அவ்வாறு சமநிலையான-பூரணமான வாழ்வை முன்னெடுக்கவும், சிந்தனை ஆற்றலை மேம்படுத்தவும் தியானம் உதவும்.

தியானம் என்பது ஆன்மிகத் தேடல் உள்ளவா்களுக்கு உரியது என்ற கருத்து தவறானது. அது, அனைவருக்குமானது. சாதாரண தனிநபா்களை உன்னத நிலைக்கு உயா்த்துவதே தியானம் என்றாா் அவா்.