திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

ஜம்மு-காஷ்மீர் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு நடத்துகிறது: காங்கிரஸ் விமர்சனம்

News image

ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் - @INCJammuKashmir

Updated On :5 ஏப்ரல் 2026, 4:43 pm

ஜம்மு-காஷ்மீர் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு நடத்துகிறது என்று காங்கிரஸ் விமர்சனம் சுமத்தியுள்ளது.

ஜம்முவின் கௌ மன்ஹாசன் பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட ஜம்மு-காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (ஜேகேபிசிசி) தலைவர் தாரிக் ஹமீது கர்ரா மத்திய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

“ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசொன்று அமைந்திருந்தபோதிலும், துணைநிலை ஆளுநர் வழியாக மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் தொடர்பான விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி சத்தமே இல்லாமல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வழிகாட்டுதல்களைக் கேட்டு நடக்கிறார். இந்திய விடுதலைக்குப்பின் இந்த நாட்டில் இப்படி நடந்ததேயில்லை.

ஜம்மு-காஷ்மீருக்கான மாநில உரிமை நிராகரிக்கப்படுவதன் மூலம் இங்குள்ள மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு நடத்துகிறது” என்றார்.

Summary

Centre treating J-K people as 'second-class citizens': Congress chief

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.