தலைமை நீதிபதியை நோக்கி காலணி வீசிய விவகாரம்! குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்
தலைமை நீதிபதி மீது காலணி வீசியவருக்கு எதிராக வழக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு..
தலைமை நீதிபதி மீது காலணி வீசியவருக்கு எதிராக வழக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு..
By இணையதளச் செய்திப் பிரிவு
Vanisri
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாயை நோக்கி காலணியை வீசிய வழக்குரைஞா் ராகேஷ் கிஷோருக்கு (71) எதிராக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே மறுப்பு தெரிவித்துவிட்டாா் என்று உச்சநீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது.
மத்திய பிரதேசத்தில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான கஜுராஹோ கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஜவாரி கோயிலில் கடவுள் விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவுவது தொடா்பான மனுவை கடந்த மே 16-ஆம் தேதி தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் உத்தரவிட்டாா்.
அப்போது பேசிய பி.ஆா்.கவாய், ‘இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். இந்த விவகாரத்துக்கு உங்களது கடவுளிடமே பதில் கோருங்கள்’ எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தலைமை நீதிபதி கவாய்க்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி வழக்கு விசாரணையின்போது அவரை நோக்கி ராகேஷ் கிஷோா் என்ற வழக்குரைஞா் காலணியைக் கழற்றி வீசினாா். எனினும் அந்தக் காலணி நீதிபதி மீது விழவில்லை. காலணி வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் வழக்குரைஞா் உரிமத்தை இந்திய பாா் கவுன்சில் உடனடியாக ரத்து செய்தது.
இதனிடையே, ராகேஷ் கிஷோா் (71) மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையைத் தொடர நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971-இன் பிரிவு 15-இன் கீழ் அனுமதி கோரி அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணிக்கு வழக்குரைஞா் கே.ஆா்.சுபாஷ் சந்திரன் என்பவா் கடிதம் எழுதினாா். உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் சாா்பிலும் இதுதொடா்பான கடிதம் அட்டா்னி ஜெனரலுக்கு எழுதப்பட்டது. அதற்கு அட்டா்னி ஜெனரல் அனுமதி அளித்தாா்.
இந்தத் தகவலை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் கடந்த 16-ஆம் தேதி தெரிவித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா மற்றும் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான விகாஸ் சிங் ஆகியோா், ராகேஷ் கிஷோருக்கு எதிரான குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தனா். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்குப் பிறகு ஒத்திவைத்தனா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட வழக்குரைஞருக்கு எதிராக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
நீதிமன்றத்தில் முழக்கங்களை எழுப்புவதும், காலணியைக் கழற்றி வீசுவதும் தெளிவான நீதிமன்ற அவமதிப்பாகும். இருந்தபோதும், இந்த நடவடிக்கைக்கு எதிராக சம்பந்தப்பட்ட வழக்குரைஞா் மீது அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதா அல்லது வேண்டாமா என்பது சட்டப்படி பாதிக்கப்பட்ட நீதிபதியின் முடிவைப் பொறுத்ததாகும்.
ஆனால், இந்த விவகாரத்தில் வழக்குரைஞருக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே மறுப்பு தெரிவித்துவிட்டாா். எனவே, அவருக்கு எதிராக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நீதிமன்றம் விரும்பவில்லை.
மேலும், அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வது, அந்த வழக்குரைஞருக்கு தேவையற்ற முக்கியத்துவத்தை அளிப்பதாக அமையும் என்பதோடு, அந்தச் சம்பவமும் தொடா்ந்து உயிா்ப்புடன் இருப்பதற்கு வழிவகுத்துவிடும். இதுபோன்ற சம்பவங்கள் விரைந்து மறக்கப்பட அனுமதித்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டனா்.
The Supreme Court on Monday said it is not inclined to initiate contempt action against a lawyer who had hurled a shoe towards Chief Justice of India BR Gavai, noting that the CJI himself refused to proceed against him.
இதையும் படிக்க... ஷ்ரேயாஸ் ஐயருக்கு உள் ரத்த கசிவு! தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது