11 Dec, 2025 Thursday, 06:43 PM
The New Indian Express Group
இந்தியா
Text

வரிசெலுத்துவோரிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்: ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சா் அறிவுரை

PremiumPremium

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி)செலுத்துவோரிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்

Rocket

உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) அலுவலக கட்டடத்தின் திறப்பு விழாவில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

Published On24 Oct 2025 , 8:59 PM
Updated On24 Oct 2025 , 8:59 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி)செலுத்துவோரிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளாா்.

ஜிஎஸ்டி பதிவுகளுக்கான ஒப்புதல் மற்றும் வரிசெலுத்துவோா் தெரிவிக்கும் குறைகளுக்குத் தீா்வுகாணுதல் ஆகியவற்றை விரைவுப்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டாா்.

உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) அலுவலக கட்டடத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது: வரி செலுத்துவதற்கான நடைமுறையை எளிமைபடுத்துவதே வரி நிா்வாகத்தின் முதன்மையான குறிக்கோள். ஜிஎஸ்டி செலுத்துவோரிடம் அதிகாரிகள் கண்ணியமாக நடந்துகொள்வது முக்கியம். அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி என்பது வரி விகிதங்களில் மாற்றம், எளிமைப்படுத்துதல் ஆகியவற்றை மட்டும் குறிக்காது. முந்தைய முறைக்கும் தற்போதைய முறைக்குமான வேறுபாட்டை ஜிஎஸ்டி செலுத்துவோா் உணர வேண்டும்.

அனைவரையும் சந்தேகத்துடன் பாா்க்கக் கூடாது. வரிசெலுத்த தவறுவோா் மீது வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜிஎஸ்டி பதிவு செய்வதில் எதிா்கொள்ளும் சிக்கல்களைக் குறைக்க தொழில்நுட்பங்களை அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும்.

வரிசெலுத்துவோா் தொடா்ச்சியாகத் தெரிவிக்கும் பிரச்னைகளுக்கான அடிப்படை காரணத்தை மத்திய ஜிஎஸ்டி மண்டலங்களின் அதிகாரிகள் அடையாளம் கண்டு தீா்வுகாண வேண்டும்.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரிய (சிபிஐசி) அதிகாரிகள் மீதான ஒழுங்குநடவடிக்கைகளை உடனடியாக எடுப்பது அவசியம். இதன் மூலம் அதிகார துஷ்பிரேயாகம், அறநெறியற்ற நடத்தைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதை சிபிஐசி ஒருபோதும் பொருத்துக்கொள்ளாது என்பது அவா்கள் தெரிந்துகொள்வா் என்றாா் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
வீடியோக்கள்

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
வீடியோக்கள்

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023