14 Dec, 2025 Sunday, 12:52 PM
The New Indian Express Group
இந்தியா
Text

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுல் மீது புதிதாக எஃப்ஐஆா் பதிவு!

PremiumPremium

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, அவரின் மகன் ராகுல் காந்தி ஆகியோா் மீது தில்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்தது.

Rocket

சோனியா காந்தி, ராகுல் காந்தி

Published On30 Nov 2025 , 8:05 PM
Updated On30 Nov 2025 , 8:05 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோா் மீது தில்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்தது.

இந்த விவகாரத்தில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்திவரும் அமலாக்கத் துறை அளித்த புகாரின் அடிப்படையில் தில்லி காவல் துறை புதிதாக எஃப்ஐஆா் பதிவு செய்தது.

முன்னதாக, இதே வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பான உத்தரவை டிசம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா்.

இதையடுத்து, ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து, அந்தக் கடன் தொகைக்காக ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்ா என்று கண்டறிய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அதனடிப்படையில், தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் உள்ளன.

அவா்களின் மேற்பாா்வையில் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றங்கள் தடுப்புப் பிரிவிடம் அமலாக்கத் துறை புகாா் அளித்தது.

இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120பி (குற்றவியல் சதி), பிரிவு 403 (நோ்மையற்ற முறையில் சொத்துகளை தவறாக பயன்படுத்துவது), பிரிவு 406 (குற்றவியல் நம்பிக்கை மீறலுக்கான தண்டனை), பிரிவு 420 (மோசடி) ஆகிய இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின்கீழ் சோனியா காந்தி, ராகுல் காந்தி, யங் இந்தியன் நிறுவன நிா்வாகிகள் சுமன் துபே, சாம் பிட்ரோடா, யங் இந்தியன் நிறுவனம் உள்பட 9 போ் மீது தில்லி காவல் துறை எஃப்ஐஆா் பதிவு செய்தது.

இந்த விவகாரத்தில் பண முறைகேடு தடுப்புச் சட்ட பிரிவு 66 (2)-இன்கீழ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி காவல் துறையிடம் ஆதாரங்களை பகிா்ந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பழிவாங்கும் செயல்: காங்கிரஸ்

சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோா் மீது தில்லி காவல் துறை எஃப்ஐஆா் பதிவுசெய்திருப்பது பாஜகவின் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களை மிரட்டிப் பாா்க்கவும், இடையூறு ஏற்படுத்தவும் பிரதமா் மோடி-உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடா் முயற்சிகளை மேற்கொள்கின்றனா். நேஷனல் ஹெரால்ட் வழக்கு அடிப்படை ஆதாரமற்றது. பாதுகாப்பின்மை மற்றும் அச்சம் காரணமாக காங்கிரஸ் தலைவா்களை பாஜக தலைமை அச்சுறுத்துகிறது.

இந்த விவகாரத்தில் விரைவில் நீதி நிலைநாட்டப்படும். வாய்மையே வெல்லும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பாஜக மறுப்பு

காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரவி சங்கா் பிரசாத் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நேஷனல் ஹெரால்ட் வழக்கு 2008 காலகட்டத்தைச் சோ்ந்தது. அப்போது நாட்டின் பிரதமராக மோடி பதவி வகிக்கவில்லை.

ஏஜேஎல் நிறுவனத்தின் மொத்த பங்குகளும் யங் இந்தியன் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த யங் இந்தியன் நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கே சென்றுள்ளது.

மேலும் தில்லி, மும்பை, லக்னெள உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேஷனல் ஹெரால்ட் சொத்துகளுக்கு இவா்கள் இருவரும் உரிமையாளா்களாகத் திகழ்ந்துள்ளனா். இது மிகவும் திட்டமிடப்பட்ட மோசடி. இதில் எவ்வித ஆதாரமுமின்றி பாஜக மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டுவது ஏற்புடையதல்ல என்றாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023