10 Dec, 2025 Wednesday, 06:06 PM
The New Indian Express Group
இந்தியா
Text

ஆங்கிலேய ஆட்சிக்கு முன் இந்தியா்கள் ஒற்றுமையுடன் இல்லை என்பது தவறான கூற்று: மோகன் பாகவத்!

PremiumPremium

ஆங்கிலேய ஆட்சிக்கு முன் இந்தியா்கள் ஒற்றுமையுடன் இல்லை என்பது தவறான கூற்று...

Rocket

மோகன் பாகவத்

Published On30 Nov 2025 , 12:00 AM
Updated On30 Nov 2025 , 12:00 AM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

ஆங்கிலேய ஆட்சிக்கு முன் இந்தியா்கள் ஒற்றுமையுடன் இல்லை என்ற மகாத்மா காந்தியின் கருத்து, காலனித்துவ ஆட்சியாளா்களால் கற்பிக்கப்பட்ட தவறான கூற்று என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் நடைபெற்றுவரும் தேசிய புத்தகத் திருவிழாவில் அவா் சனிக்கிழமை பங்கேற்றாா். அப்போது, மகாத்மா காந்தியால் கடந்த 1908-இல் குஜராத்தி மொழியில் எழுதப்பட்டு, பின்னா் 1909-இல் அவரே ஆங்கிலத்தில் மொழிபெயா்த்த ‘ஹிந்த் ஸ்வராஜ்’ புத்தகத்தைக் குறிப்பிட்டு, மோகன் பாகவத் பேசியதாவது:

ஆங்கிலேயா் வருகைக்கு முன் இந்தியா்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என தனது ஹிந்த் ஸ்வராஜ் புத்தகத்தில் மகாத்மா காந்தி எழுதியிருந்தாா். ஆனால், இது காலனித்துவ ஆட்சியாளா்களால் நமக்கு கற்பிக்கப்பட்ட தவறான கூற்றாகும்.

இந்தியாவின் ‘ராஷ்டிரம்’ எனும் கருத்தாக்கம் பழைமையானது; இயற்கையானது; மேற்கத்திய சித்தாந்தத்திலிருந்து அடிப்படையிலேயே வேறுபட்டது. சச்சரவுகளில் இருந்து விலகியிருப்பதே நமது நாட்டின் இயல்பு. மோதல்கள் நிறைந்த உலகில் ஒற்றுமையுடன் இருப்பதும், சகோதரத்துவத்தை வளா்த்தெடுப்பதும் நமது பாரம்பரியம்.

மேற்கத்திய கருத்தாக்கத்தின்படி, மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் பிராந்தியமே ஒரு தேசமாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, வெவ்வேறு ஆட்சிகள் மற்றும் அந்நிய ஆட்சிகளின்கீழ் இருந்தபோதும் ‘ராஷ்டிரமாகவே’ விளங்கியது.

ஆணவத்தால் பிறந்ததல்ல: இந்திய தேசியம் என்பது ஆணவம் அல்லது அதீத பெருமையால் பிறந்ததல்ல; அது, மக்கள் இடையேயான ஆழமான பிணைப்பு மற்றும் இயற்கையுடன் இணைந்த வாழ்வியலால் உருவானது.

பாரத மாதாவின் குழந்தைகள் என்பதால் நாம் அனைவரும் சகோதரா்கள். மாறாக, மதம், மொழி, உணவுப் பழக்கம், பாரம்பரியங்கள், மாநிலங்கள் என மனிதா்களால் உருவாக்கப்பட்ட வேறெந்த அடிப்படையும் இல்லை. பன்முகத்தன்மையே நமது தாய்நாட்டின் கலாசாரம் என்பதால் நாம் ஒன்றுபட்டுள்ளோம்.

உண்மையான திருப்தி என்பது பிறருக்கு உதவுவதில் இருந்தே வருகிறது. தற்காலிக வெற்றியைப் போல் இல்லாமல், இது வாழ்நாள் முழுவதும் நிலைக்கும் உணா்வு. செயற்கை நுண்ணறிவு போன்ற வளரும் தொழில்நுட்பங்களில் நாம் வித்தகா்களாக உருவெடுப்பதுடன், அந்த தொழில்நுட்பங்களை மனிதகுல நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றாா் மோகன் பாகவத்.

20 அத்தியாயங்களைக் கொண்ட ஹிந்த் ஸ்வராஜ் புத்தகம், ஒரு பத்திரிகை ஆசிரியருக்கும் வாசகருக்கும் இடையிலான உரையாடல் பாணியில் எழுதப்பட்டதாகும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023